Sunday, July 3, 2016

சிவஸ்துதி
பிரம்மஶ்ரீ எஸ். ராமஸ்வாமி சாஸ்திரிகள்
கிருஷ்ணகிரி

சிவஞான பூஜா மலர்குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
     
       புஜங்கோபவீதீ கடெளசர்மதாரீ
       வஹந்மூர்த்நிகங்காம் ஸுதாம்கஞ்சபர்க:,
       கலேலோகபீதம் விஷஞ்சாபிஹஸ்தைஸ்-
       த்ரிசூலாக்கிடக்கா ம்ருகான்பாதிஸாதூந்.                         1

1.     பாம்மைப் பூணூலாகவும், இடுப்பில் தோலுடையையும், தலையில் கங்கையுடன் சந்திரனையும், கழுத்தில் உலகத்தை நடுங்கவைக்கும் ஆலஹால விஷத்தையும், கைகளில் திரிசூலம், தழல், உடுக்கை, மான் இவற்றையும் அணிந்தவராகத் தேஜோமூர்த்தியான ஸர்வேச்வரன் ஸாதுக்களைக் காப்பாற்றுகிறார்.
       அயம்மேருதன்வா ஹரீஷு:க்ஷணேந
       ஸ்திதோபூரதேப்ரஹ்ம யந்தாத்ரிநேத்ர:,
       சதுர்வேதவாஹே விஹஸ்யைவதேவஸ்
       த்ரிபூர்பூததைத்யான் சகாரக்னிதக்தாந்.                            2

2.     இவர் திரிபுரமான பலவான்களான அசுரர்களை, நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும் கொண்ட பூமியான ரதத்தில் அமர்ந்து முக்கண்ணராகி விளங்கி, மேருமலையை வில்லாகவும் விஷ்ணு தேவரை அம்பாகவும் வைத்துக் கொண்டு நொடிப் பொழுதில் அட்டஹாஸச் சிரிப்பாலேயே எரித்து விட்டார்.
       ப்ரபீதாமரான்வீர சூராஸுரேந்த்ராத்
       ரிரக்ஷு:தபஸ்வீ ஸ்மராரி: ஸுதார்த்தீ,
       ஹிமாத்ரேஸ்தநூஜாம் விவாஹ்யஸ்மராக்ஷீம்
       ததெளஸ்கந்தமேப்ய: ஸுதம்ஸைந்யநாதம்.                      3

3.     வீரனான சூரபத்மன் என்னும் அசுரனிடம் அதிக பீதியடைந்த தேவர்களைக் காக்க விருப்பமுள்ளவராகத் தபஸ்வியானாலும் காமனை எரித்தவரானாலும் மகப்பேற்றையும் விரும்பி ஹிமாலய அரசன் மகளான காமாக்ஷியை மணந்து குமரக்கடவுளைத் தேவசேனாதிபதியாக அளித்தார் சிவ பெருமான்.
       ப்ரதோஷே()திகாந்தம் நடந்தம்மஹேசம்
       ப்ரமோதப்ரதம்ஸர்வ தேவாமுனீந்த்ரா:
       லிலோக்யாதிதுஷ்டா: பதேபக்திநம்ரா:
       ஸுமைரர்சயந்தி ப்ரபும்ப்ராப்தகாமா:                              4

4.     பிரதோஷம் என்னும் சாயம் சந்திவேளையில், (த்ரயோதசி திதியில்) வெகு அழகாக நடனம் செய்யும் மஹேச்வரராகிய நடராஜாவை, ஆனந்தத்தை வாரி வழங்குபவரை, எல்லாத் தேவர்களும் கண்டு களித்து அவரது பாதங்களில் பக்தியால் வணங்கி, பிரபுவான அவரைத் தம் விருப்பங்கள்யாவும் அடையப்பெற்றவர்களாகப் பூக்கொண்டு அர்ச்சிக் நின்றனர்.
       வ்ருஷாரூடதேவோ பவாநீஸஹாவோ
       ஹிமாத்ரெளஹிகைலாஸ லோகேவிபாதி,
       அயம்தர்பபேத்தாஹி பெளலஸ்யயத்நேது
       ஸங்கீதரைமேந துஷ்ட: ஸ்தவோ.                                5

5.     பவாநியுடன் கூடியவராகக் காளைமாட்டின் மேல் அமர்ந்த இவர் ஹிமாலயத்தில் கைலாச லோகத்தில் விளங்குகிறார். இராவணனின் கெட்ட முயற்சியில் (கைலாசத்தைப் பெயர்த்தெறிய முயற்சித்ததில்) அவன் கர்வத்தைப் பிளந்தவர், ஆனாலும் அவன் செய்த சாமகானத்துதியால் மகிழ்ச்சியடைந்தார்.
       மஹாத்மாகபர்தீ கபாலீச்மசாநே
       விரக்தோஜிதக்ரோத பீசோகநாம:,
       பசூனாம்பதிர்பஸ்ம ருத்ராக்ஷதாரீ
       மஹர்ஷி: சிவோந: ஸ்திரோபாதுசித்தே.                          6

6.     மஹாத்மா, ஜடையுடையவர், சுடலையில் கபால மாலை தரித்தவர், வைராக்ய மூர்த்தி, எல்லாக் காமங்கள், பயம், கோபம், சோகம், முதலியயாவற்றையும் கடந்தவர், பசுக்களாகிய ஜீவர்களின் தலைவர், விபூதிருத்ராக்ஷ மணிந்த மஹரிஷி வடிவம் உள்ள சிவபிரான் நம் மனதில் நிலையாக விளங்கட்டும்.
       விஷ்ணோரபி யதைச்வர்யம் ஶ்ரீபதித்வம் ப்ரபாபலம்,
       விச்வரூபம் யக்ஞக்ருத்யம் சிவம்தத் சிவபூஜயா.                 7

7.     விஷ்ணுவினுடைய ஐச்வர்யம், லக்ஷ்மியை மனைவியாக அடைதல், கீர்த்தி, பலம், விச்வரூபம், மங்களங் கொடுக்கும் யஜ்ஞகார்யம் யாவும் சிவபூஜையால் அடையப் பெற்றவை.
       வேதேஷு பஹுதா ருத்ரோ நமோ வாசார்ச்சிதோ() ஸக்ரூத்,
       யக்ஞேஷ்வபி தஸ்மின்ஸ்யாத் விமுக: ச்ருதிமார்கக:.         8

8.     வேதங்களில் ருத்திரர் பலவடிவமுள்ளவராக நமஸ்காரங்களால் போற்றப்படுகிறார். யக்ஞங்களிலும் அப்படியே ஆக, வேதமார்க்கத்தைக் கொண்டவர்கள் அவரை அலக்ஷியம் செய்யக் கூடாது.
சிவஸ்துதி உரையுடன் முற்றிற்று.
      


No comments:

Post a Comment