Sunday, July 3, 2016

ஶ்ரீ பஞ்சாக்ஷர புஜங்கம்
தர்மப்ரவசன ரத்னம், உத்தம உபன்யாசக சக்ரவர்த்தி
பிரம்மஶ்ரீ மஞ்சகுடி கே. ராஜகோபால சாஸ்திரிகள்

சிவஞான பூஜா மலர்குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
     
       நமஸ்யேகிரீச ஸ்வயம்ஜோதிராத்மன்
       கைலாஸவாஸின் பவபீதிசாந்த,
       த்வாமேவயாசே () த்ய பக்திம்ப்ரதேஹிமே
       மாம்ரக்ஷதேவேச சம்போதயாநிதே.                               1

1.     ஹே கிரீசா! நீங்கள் ஜ்யோதிஸ்வரூபமாக இருந்து ஜீவ ரக்ஷணம் செய்ய கைலாசத்தில் வசித்து மக்களின் பயத்தை அடக்கும் சிவமே! உங்களை வேண்டுகிறேன்! சம்போ! தயாநிதியே, தேவேச, எனக்குப் பக்தியைக் கொடுங்கள். என்னை ரக்ஷித்தருள வேணும்.
       மஹாதேவமூர்த்தே மஹேசானசம்போ
       மஹாபாக்யதாயின் மஹாமேருவாஸின்,
       மஹாவாக்யகுப்த மஹாதேஹரூப
       மஹத்பி: ஸ்துதஸ்த்வம் மாம்ரக்ஷசாத்ய.                         2

2.     மஹாதேவனே, மஹேசான சம்போ, மஹா பாக்யத்தையளிப்பவனே, மஹாமேருவில் வஸிப்பவனே, மஹா வாக்யங்களில் மறைந்திருக்கும் ரூபமுடைய சம்போ! மஹான்கள் உங்களைத் துதிசெய்கிறார்கள் (அப்படிப்பட்ட நீர்) என்னை இப்பொழுதே ரக்ஷித்தருள்வீராக.
       சிவம்தேவதேவம் ம்ருடம்ஸர்வசாந்தம்
       பவம்பாவகம்யம் ப்ரபும்தாந்தமூர்த்திம்
       நமஸ்யேஸதாபக்தி பூர்வம்கிரீசம்
       சிவாதன்யதைவம் நஜானேநஜானே.                              3

3.     சிவன், தேதேவன், ம்ருடன், ஸர்வசாந்தன், பவன் தியானத்தினால் அடையத்தகுந்தவர், அடக்கமானவர், கிரீசர் என்ற பெயர்களைச் சொல்லி எப்பொழுதும் பக்தி பூர்வமாக நமஸ்கரிப்பேன். சிவனைத் தவிர வேறு தெய்வம் தெரியாது, தெரியாது.
       வாம்வக்ரதுண்டம் ஸுதம்ஜாதமாத்ரே
       வைபுத்ரம்ஸ்வயம்ப்ரீதி பூர்வம்ப்ரக்ருண்ணன்,
       அங்கேநிதாயா ( ஸ்ய மூர்த்னிஸ்வஜிக்ரன்
       ஸோமாகணேசேதி பக்தைஸ்ஸ்துதஸ்த்வம்.                     4
4.     யானைமுகமுடைய புத்திரனைப் பெற்றவுடன் ப்ரீதியுடன் தன் மடியில் வைத்து உச்சி முகந்து ஸந்தோஷப்படும் பரமேச்வரனைஸோமாகணேசன்என்று பக்தர்கள் ஸ்துதி செய்வார்கள்.
       யமிச்சன் வையம்தேஜ புஞ்ஜாபிராமம்
       பரம்ப்ரம்மூர்த்திமம் ஸ்வபாஸாலஸந்தம்,
       நமச்சிவாயேதி மனும்ரூபவந்தம்
       ஸதாபாவயேஹ்ருத் ஸரோஜேகிரீசம்.                            5

5.     ஸ்வயமாக (கோடிஸூர்யன் போல) ஜ்யோதிர் மண்டலமாக விளங்கும் பரப்ரும்மமாயும், தன் ஒளியினால் தானாகப் பிரகாசிக்கும் சிவ மூர்த்தியும், ‘நமச்சிவாயஎன்னும் மந்திரத்தின் உருவமானவருமான கிரீசனான சிவபெருமானை எப்போதும் என் உள்ளத்தாமரையில் வைத்திருப்பேன்.
ஶ்ரீ பஞ்சாக்ஷர புஜங்கம் உரையுடன் முற்றிற்று.
சிவம்.

      

      


No comments:

Post a Comment